கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலைச் சேர்ந்தவர் ஜெகன். ராணுவ வீரரான இவர் காஷ்மீரில் ராணுவத்தில் சேவையாற்றி வருகிறார் . விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பிய ஜெகன், தன் குடும்பத்துடன் ஊட்டிக்குச் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறார். சுற்றுலாத்தலங்களுக்குச் செல்வதற்காக ஊட்டி – கூடலூர் சாலையில் பயணித்துக்கொண்டிருந்த ஜெகன்,
ரோகிணி சந்திப்பு பகுதியிலுள்ள ‘அம்மாஸ் கிச்சன்’ என்ற தனியார் உணவகத்தில் காலை உணவு சாப்பிட, குடும்பத்துடன் சென்றிருக்கிறார். தோசை ஆர்டர் செய்த ஜெகனுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் எலி இறநது கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். ஹோட்டல் நிர்வாகத்திடம் உடனடியாக முறையிட்டிருக்கிறார். ஆனால், ஹோட்டல் நிர்வாகத்தினர் ஜெகனை சமாதானம் செய்து அனுப்பிவைத்திருக்கின்றனர்.
இதனால் அதிருப்தியடைந்த ஜெகன், சாம்பாரில் எலி கிடப்பதை வீடியோ எடுத்ததுடன், தனக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்த வீடியோவையும் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாராக அனுப்பிவைத்திருக்கிறார். எழுத்துபூர்வமாக புகாரையும் அளித்திருக்கிறார்.
இதனடிப்படையில் அம்மாஸ் கிச்சன் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, உடனடியாக அந்த ஹோட்டலை மூட உத்தரவிட்டிருக்கிறார்.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர், “வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகிக்கப்பட்ட சாம்பாரில் எலிக்குஞ்சு கிடப்பதாக வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வுசெய்தேன். தற்காலிகமாக அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டிருக்கிறேன். சமையலறையை உடனடியாகச் சுத்தம் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.