தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை, தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 2018-ல் நடந்ததுபோலவே, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பும் வந்திருக்கிறது.
இந்தக் குறிப்பிட்ட ஐந்து மாநிலத் தேர்தலுக்கான பிரசாரங்களும் பல்வேறு வகைகளில் சூடுபிடித்திருக்கின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலுள்ள 100 தனியார் லாக்கர்களில் ரூ. 500 கோடி கறுப்புப் பணம், 50 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரோடி மீனா குற்றம்சாட்டியிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெய்ப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்குச்சொந்தமான 100 லாக்கர்களில் சுமார் ரூ.500 கோடி ரூபாய் கறுப்புப் பணமும், 50 கிலோ தங்கம் இருக்கின்றன. அது யாருடைய லாக்கர் என்பதை வெளிப்படுத்தினால் நீங்கள் அதைத் திறந்து சோதிக்க மாட்டீர்கள். எனவே, காவல்துறை வந்து லாக்கரைத் திறக்கும் வரை நான் அதன் வாசலில் அமர்ந்திருப்பேன். இப்போது அந்தப் பெயர்களை வெளியிட்டால், அரசியல் அழுத்தங்களால் லாக்கர்கள் திறக்கப்படாது” எனத் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தக் குற்றச்சாட்டு, தற்போது ராஜஸ்தான் அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.