கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். ஆதிக்கு கார்த்திகேயன் என்ற நெருங்கிய நண்பர் இருக்கிறார்.

கோவை

அவரின் மனைவி இறந்துவிடவே, கார்த்தி கோவையில் தனியாக தங்கி ஓர் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். இருவரும் அடிக்கடி மது அருந்துவது வழக்கம்.

நேற்று முன்தினம் இருவரும் மது அருந்திவிட்டு ஆதியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது மாஸா குளிர் பானத்தில் வோட்கா மதுபானத்தை கலந்து அதை மனைவியின் வாயில் ஊற்றியிருக்கிறார். அதைக் குடிக்க மறுத்து தட்டிவிட்டு மனைவி பெட்ரூமுக்கு சென்றிருக்கிறார்.

மதுபோதை

அவரை பின்தொடர்ந்த கணவர் ஆதி, அவரை ஹாலுக்கு அழைத்துவந்து நண்பன் கார்த்தியுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு தொல்லை கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து அவரை கட்டாயப்படுத்தி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதோடு, “இதை வெளியில் கூறினால் கொன்றுவிடுவோம்” என்றும் அவரை மிரட்டியிருக்கின்றனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செட்டிப்பாளையம் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

கைது

அதனடிப்படையில் போலீஸார் அவரின் கணவர் ஆதிநாராயணன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.