வீடுகள் ஒதுக்குவதில் குலுக்கல் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருச்சி தாராநல்லூர் அருகே உள்ள கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் 192 வீடுகள் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 64 மாடி வீடுகள் மற்றும் 75 வீடுகளும் தற்போது பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குலுக்கள் முறையில் பயனாளிகளுக்கான வீடு ஒதுக்குவதற்கான தேர்வு திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

image
மேலும் இதில் வீடு ஒதுக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு முறையான அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படாமலும், குறிப்பாக கல்மந்தை பகுதியில் வசித்து வந்த சிலரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, பூலோகநாதர் கோவில், சந்து கடை, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 40 பேருக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
image
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காந்தி மார்க்கெட் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது குழுக்கல் நடத்தப்படவில்லை என்றும், திங்கட்கிழமை முறையாக குலுக்கல் நடத்தப்பட்டு மக்களுக்கு வீடு ஒதுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.