கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்து இருக்கிறது இனுங்கூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (55). வழக்கறிஞராக இருக்கிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இவர், திருச்சி, குளித்தலை உள்ளிட்டப் பகுதிகளில் அமைந்திருக்கும் நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி வருகிறார். இவர், கடந்த 15-ம் தேதியன்று, இனுங்கூர் வீட்டில் இருந்தபோது, அருகேயுள்ள வீட்டில் வசிக்கும் மூன்று வயதுச் சிறுமி ஒருவர், பழனியப்பன் வீட்டுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

பழனியப்பன்

அப்போது, வீட்டில் வேறு யாரும் இல்லாததால், பழனியப்பன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இது குறித்து, அந்த சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பழனியப்பன் மீது போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரை கைதுசெய்து, கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர். சிறுமிக்கு வழக்கறிஞர் ஒருவர் பாலியல் தொல்லைக் கொடுத்த விவகாரம், குளித்தலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.