12-வது உலக இந்தி மாநாடு, பசுபிக் கடல் தீவு நாடான ஃபிஜியில் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெற்றது. இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், ஃபிஜி பிரதமர் சித்திவேணி ரபுகாவும் (Sitiveni Rabuka) கடந்த 15-ம் தேதி தொடங்கிவைத்தனர்.
இந்த நிலையில், உலக அரங்கில் இந்தியை வளர்க்கும் வகையில் செயல்படும் அமைப்புகளை வலுப்படுத்த, இந்தியா இலக்கு நிர்ணயித்திருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் (கிழக்கு) சௌரப் குமார், “மொழி ஆய்வகம் அமைப்பது குறித்த அறிவிப்பை முரளீதரன் வெளியிட்டார். இந்த மொழி ஆய்வகத்தின் மூலம் ஆசிரியர்கள் பயிற்சி பெற முடியும். இப்போது நாங்கள் மென்பொருளில் (software) கவனம் செலுத்தி வருகிறோம்.
இதில் எங்களின் உள் செயல்பாடுகள் முடிந்ததும், இந்த மொழி ஆய்வகத்தை ஃபிஜிக்கு வழங்குவோம். ஃபிஜிக்காக எங்களிடம் வளர்ச்சி, திறன் ஆகியவற்றை வளர்க்கும் திட்டம் இருக்கிறது. அது சிறப்பாகச் செயல்பட்டும் வருகிறது. வெளிநாடுகளில் இந்தியை வளர்க்க `இந்தி ஊக்குவிப்பு அமைப்பை’ இந்தியா பலப்படுத்தும்” என்று தெரிவித்தார்.
“இந்தியை ஊக்குவிக்க சர்வதேச அமைப்புகளை வலுப்படுத்துவோம்” – வெளியுறவுத்துறை அமைச்சகம்