பெரம்பலூரில் வரதட்சனை புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்து படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக மனைவியே புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் கணவர் பெயர் விமல் (31). இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், கணவர் தன்னுடன் வாழ 50 சவரன் நகை மற்றும் பல லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை வரதட்சனையாக கேட்கிறார். அதோடு தினமும் குடித்து விட்டு வந்து தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துகிறார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

image

மேலும் தனது கணவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போல் அவரது செல்போனில் வீடியோ இருப்பதாகவும் அதனை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும் அகிலா புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வரதட்சனை புகாரில் விமலை கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து விமலின் தந்தை, தாய், அக்கா உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அந்தப் பெண் அளித்த பிற புகார்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.