நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி, சில நாட்களிலேயே கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் சூர்யாவும், ‘விரைவில் மீண்டும் படப்பிடிப்புத் தொடங்கும், அதற்காகக் காத்திருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது, இக்கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்காது, எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யாவை விலகிக்கொள்வதாக இயக்குநர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இயக்குநர் பாலாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இது குறித்து அறிப்பு ஒன்றை வெளியிடுள்ள பாலா, “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ‘வணங்கான்’ படப்பணிகள் தொடரும்…”என்று கூறியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.