நாகையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 22 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளது.

நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த காரைநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அருள்தாஸ் என்பவருக்கும் 15 வயது சிறுமிக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள்தாஸ், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

image

இதையடுத்து சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், வீட்டிலிருந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் மூலம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த நாகப்பட்டினம் அனைத்து மகளிர் போலீசார் அருள்தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 8 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் குற்றவாளியான அமல்தாஸுக்கு 20 வருடம் சிறை தண்டனையும், 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அமர்வு நீதிபதி மணிவண்ணன் தீர்ப்பளித்தார்.

image

மேலும் அபராதத் தொகையை கட்டத் தவறியதால் மேலும் ஒரு வருடம் நீட்டித்து 21 வருடம் சிறை தண்டனை வழங்கி குற்றவாளியை கடலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.