நடிகர் ஹரிஷ் கல்யாண் இன்று மதியம் தனது திருமணம் குறித்து அறிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண், ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும் ‘ப்யார் பிரேமா காதல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென ஒரு இடம் பிடித்தார். இதற்கிடையில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி தனக்கும், நர்மதா உதயகுமாருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் நாளை தனது திருமணம் நடக்க இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் ஹரிஷ்  கல்யாண் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ்  கல்யாண், “வழக்கமாக ஆடியோ, டீசர், ட்ரெய்லர் வெளியீட்டில் தான் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக என் வாழ்வின் முக்கியமான ஒரு விஷயத்திற்காக சந்திக்கிறேன். எனக்கு நாளை காலை 9 – 10.30 மணிக்கு, திருவேற்காட்டில் (GPN Palace) திருமணம் நடைபெற உள்ளது. இந்த இனிமையான செய்தியை நேரில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு படியிலும் ஊடக நண்பர்களின் பங்கு இருந்திருக்கிறது. என்னுடைய திருமண வாழ்வுக்கும் உங்களுடைய அன்பும் ஆதரவும் வேண்டும்.

image

பிறகு இன்னொரு விஷயம், இந்தத் திருமணம் காதல் திருமணமா எனப் பலரும் கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை, இது வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம். அவருடைய பெயர் நர்மதா உதயகுமார். அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ‘டீசல்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த சந்திப்பில் என்னுடைய படங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தத் தருணத்தில் என்னுடைய அன்பு சகோதரர் எல்.எம்‌.கொளஷிக்கின் இழப்பை நினைத்து வருந்துகிறேன். சென்ற வருடம் ஒருமுறை அவரை சந்தித்த போது, அடுத்த வருடம் திருமணம் நடந்துவிடுமா பிரதர் என விளையாட்டாகக் கேட்டார். இப்போது அவர் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அவரது இழப்பில் வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.