வாடிக்கையாளர்களைக் கவர அதிவேக இணையம் சிறந்த ஆயுதம் என்றே கூற வேண்டும். இந்த அதிவேக இணையத்தை வழங்கும் தொலைத்தொடர்பையே பெரும்பான்மையான மக்கள் தேர்வு செய்கின்றனர்.

Representational image

2G, 3G என முன்னேறி தற்போது 5G நெட்வொர்க்கில் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கிறது. 5G சேவையை டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி போன்ற நான்கு நகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்தி இருந்தது ரிலையன்ஸ் ஜியோ. இந்நிலையில் சென்னையிலும், ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவிலும் 5G சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ கூறியுள்ளது.

நாத்துவாராவில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு 5G சேவை Wi-Fi வழியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதேபோல் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர், வாரணாசி போன்ற 8 முக்கிய நகரங்களில் ஏர்டெல் 5G சேவையை வழங்கி வருகிறது.

Airtel

தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோவின் 5G சேவையை பெறும் நகரங்கள் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் வாரணாசி என இந்தியாவில் மொத்தம் 10 நகரங்களில் 5G சேவை வழங்கப்படுகிறது.

இந்த இரண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும், 5G சேவையைப் பெற 5G ஸ்மார்ட்போனை வைத்திருந்தாலே போதுமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அப்புறம் என்ன ?… ஆரம்பிக்கலாங்களா….

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.