திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகேயுள்ள அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் மித்ரா. நிறை மாத கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக அருகில் உள்ள அலமாதி அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு மித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அலமாதி

அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இரவில், மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் பிரசவம் பார்த்திருக்கிறார்கள்.

பிரசவத்தில், மித்ராவுக்கு ஆண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. மேலும், மித்ராவுக்கு அதிக அளவு ரத்தப் போக்கு இருந்துள்ளது. இதனால், அவர் மேல் சிகிச்சைக்குச் சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.

அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அலமாதி

இந்த நிலையில், குழந்தை இறந்ததற்குச் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததுதான் காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பாக சோழவரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.