பிரபல பாகிஸ்தான் நடிகையான ரேஷம் என்பவர் பாலத்தின் மேல் நின்றுகொண்டு மாமிசக் கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் ஆற்றில் ஓடும் தண்ணீரில் வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைக் கண்ட நெட்டிசன்கள் பலர் அவரைத் திட்டி, `ஓடும் ஆற்றுத் தண்ணீரை இப்படி மாசுபடுத்தலாமா…’ என்று கேள்வி எழுப்பி அவரை கிண்டல் செய்து வந்தனர். இந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் சரச்சையைக் கிளப்பின
ரேஇதனால் மிகவும் வருத்தப்பட்ட அந்த நடிகை இது குறித்து விளக்கமளித்து, தான் இரண்டு முறை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தான் பல விஷியங்களை மறந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், அந்தசமயத்தில் சரியாகத் தனக்கு நினைவுகள் இல்லை அதன் காரணமாகவே தான் அப்படிச் செய்ததாகக் கூறினார். மேலும் நெட்சன்கள் குறித்துப் பேசிய அவர், “நான் தவறு செய்தேன் என ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நாட்டில் நிறைய வன்முறைகள் நடக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கின்றன. அதைப்பற்றியெல்லாம் இங்கு யாரும் பேசுவதில்லை. ஆனால் நான் செய்த சிறிய தவறை இவ்வளவு தூரம் பெரிதாகப் பேசுகிறீர்கள்” என்று கூறினார்.