குன்றத்தூர் அருகில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவருக்குத் திருமணமாகி தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். வெங்கடேசனுக்குத் தீவிர குடிபோதை பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வெங்கடேசனுக்கும் தேவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், இவர்மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. வெங்கடேசன் தேவியைப் பிரிந்து வேறு சில பெண்களுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறப்படுகிறது.

வெங்கடேசன்

இதற்கிடையில் வெங்கடேசன் அடிக்கடி வீட்டுக்குவந்து குடிக்கப் பணம் தரும்படி தேவியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதேபோல, நேற்று மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார்.

அப்போது வீட்டிலிருந்த தேவியின் தம்பி சதீஷ்குமார் வெங்கடேசனை தட்டிக் கேட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் சதீஷ்குமார் வெங்கடேசனை அருகிலிருந்த கம்பியால் அடித்ததில் அவர் சுருண்டு விழுந்திருக்கிறார்.

சதீஸ்குமார்

படுகாயமடைந்த வெங்கடேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. சம்பவறிந்து வந்த காவல்துறையினர், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தலைமறைவாக இருந்த சதிஷ்குமாரைக் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மைத்துனர், அக்கா கணவரை அடித்துக் கொலைசெய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.