பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடிகர் கரண் சிங் குரோவரைக் காதலித்து வந்தார். அவர்கள் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட் பிரபலங்களுக்கு பிரத்யேக திருமண வரவேற்புக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் நடிகர் சல்மான் கான், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்படப் பலரும் கலந்து கொண்டனர். இருவரும் ‘அலோன்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

திருமணம் செய்து கொண்ட பாலிவுட் நடிகைகள் பெரும்பாலானோர் தற்போது குழந்தை பெற்றுக்கொண்டனர். பிபாஷா பாசு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து எதுவும் தெரிவிக்காமலிருந்தார். இதனிடையே கடந்த மார்ச் மாதமே பிபாஷா பாசு கர்ப்பமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்து அவர் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

கணவர் கரண் சிங் குரோவருடன் பிபாஷா பாசு

கடந்த மாதமும் இதே போன்ற ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் கரண் சிங் குரோவர் தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டு கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதோடு ஒரு கவிதையும் அதில் வெளியிட்டுள்ளார்.

அதில், “நாங்கள் இந்த வாழ்க்கையை தனித்தனியாகத் தொடங்கினோம். பின்னர் இருவரும் சந்தித்துக்கொண்டு இருவராக வாழ ஆரம்பித்தோம். இருவர் மட்டுமே அன்பைப் பரிமாறிக் கொண்டோம். இருவராக இருந்த நாங்கள் விரைவில் மூவராக மாற இருக்கிறோம். விரைவில் எங்களது குழந்தை எங்களுடன் சேரும்” என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் இந்த பாலிவுட் தம்பதிக்கு சமூக வலைதளத்தில் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.