இனி குரூப் அட்மின் மட்டும் யார் வெளியேறுகிறார்கள் என்பதை பார்க்க முடியும்.

உலகளவில் அதிகம் பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப், தொடர்ந்து புதுப்புது அம்சங்களை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கும் புதிய அப்டேட், பயனர்களின் தனியுரிமை கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த வசதியின் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது நாம் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டும், யார் பார்க்கக்கூடாது என்பதை கட்டுப்படுத்த முடியும். அதாவது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை யார் பார்க்கலாம், பார்க்க்கூடாது என்பதை கட்டுப்படுத்துவதுபோல், இதையும் கட்டுப்படுத்தலாம்.

image

மேலும் குரூப்பில் இருக்கும் ஒருவர் எக்ஸிட் ஆகும்போது அதன் நோட்டிபிகேஷன் அட்மின்கள் தவிர மற்ற உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாது.  இனி குரூப்பின் அட்மின் மட்டும் யார் வெளியேறுகிறார்கள் என்பதை கவனிக்க முடியும். இந்த வசதி இந்த மாதத்தில் வருகிறது.  

ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் வகையில் அனுப்பப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை இனி சேமிக்கவோ ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவோ முடியாது. இந்த வசதி பரிசோதனையில் இருப்பதால் விரைவில் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: `இனி போலிகளுக்கு இங்க இடமில்ல’- டிக்கெட் செக்கர்கள் மூலம் செக் வைக்கும் தெற்கு ரயில்வே

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.