நடிகர் சூரி தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோயில் விழாவில் ஒயிலாட்டம் ஆடும் வீடியோவை அவரது நண்பர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற விருமன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூரி, சூர்யாவை பாராட்டி பேசும் போது… 1000 கோயில் கட்டுவதைவிட, 1000 அன்ன சத்திரம் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பலநூறு ஆண்டுகள் பேசும் எனக் கூறியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதற்கு ஹிந்து அமைப்புகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் சூரியின் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் ராசாக்கூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் திரைப்பட நடிகர் சூரி, பொதுமக்கள், ஊர் பெரியவர்கள், இளைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடும் வீடியோவை அவரது நண்பர்கள் மற்றும் சூரியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர்.

நடிகர் சூரி பக்திக்கும் கோயிலுக்கும் ஆன்மிகத்திற்கும் எதிரானவர் அல்ல, அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர். அவருடைய குடும்பம் ஒரு சாமியாடி குடும்பம் என்பதை கருத்தாக பதிவிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.