இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்குப் பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனும் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன் துஷாரா விஜயன், ஹரி, ஷபீர், வினோத், மைம்கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான கதைக்கருவில் உருவாகியிருந்த இந்தப் படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது.

image

யாழி ஃபிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு கிஷோர்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். டென்மா இசையமைத்துள்ளார். செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்படம், ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகலாம் என்று தகவல் வெளியான நிலையில், போட்டியை சமாளிக்க, கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்தப் படம் வெளியாகிறது. 

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.