நடிகர் அருண் விஜய் அடுத்ததாக இயக்குநர் ஏ.எல். விஜயின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘யானை’. இந்தப் படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். கே.ஜி.எஃப். புகழ் ராமச்சந்திரா ராஜூ, சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், அம்மு அபிராமி, யோகி பாபு, புகழ், ஜெயபாலன், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

image

குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தைத் தொடர்ந்து அருண் விஜய், அடுத்ததாக இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘கிரீடம்’, ‘தலைவா’, ‘மதராசப்பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய், கடைசியாக ‘தலைவி’ படத்தை இயக்கிருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.