கத்திரி வெயில் இரவில் காற்று வேண்டி சாளரம் திறந்தேன். மாத்திரைகளோடு பக்கவிளைவு வருவது போல் வீட்டில் நுழைந்த காற்றோடு வந்தன கொசுக் கூட்டங்கள். மனிதன் பரிணாமவளர்ச்சி கடைசியாக எப்போது அடைந்தான் என தெரியவில்லை. ஆனால் இவைகளோ ஒவ்வோரு புதிய கொசுவர்த்திகள் சந்தையில் இறங்கும் போதும் பரிணமிக்கிறது போலும். எத்தனை கொசுவர்த்திகள் கொழுத்தினாலும் இறந்தபாடில்லை. இதில் சில அக்குபங்க்சர் அறிந்தன போல. வலியில்லாமல் குருதி குடிக்கிறது. குடி என்றதும் சந்தேகம். குடிகாரர்கள் குருதி குடித்தால் கொசுவுக்கும் போதை ஏறுமோ? கொசு கடிக்கும் போது மட்டும் எனை நான் தட்டிக் கொடுக்க தவறுவது இல்லை. இரத்தம் சிந்தி கற்றுக்கோண்டேன் அல்லவா.

Representational Image

தவளை போல் தாவுகிறேன் தப்பித்த கொசுவை கொல்ல.. ஏசி போட்ட வீட்டில் கொசுக்கள் ஆட்டம் போடுவதில்லையாமே. உண்மையா? ம்ம்ம்.. ஒருவேளை ஏசி காற்றை லஞ்சமாக பெறுகிறதோ. கரண்ட் கட் ஆகும் போது தெரிந்துவிடும் கொசுவின் நேர்மை. “ஏழைகளின் இரத்தத்தை எவனெவனோ உருஞ்சுகிறான். நான் கொஞ்சம் குடிச்சா என்ன தப்பு” என்பதே இவைகளின் எண்ணம் போலும். இரவில் நல்ல காற்றுக்குகூட விலையுண்டு… என்னத்த சொல்ல.‌

– இவண்

தினசரி குருதிக்கொடையாளி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.