தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தை, ஜூலை 1-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஓடிடியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற ‘மாறன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்தை ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய ஜவஹர் மித்ரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷுடன், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வந்தநிலையில், கிராபிக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் தனுஷ் – பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

image

படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தை ஜூலை 1-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’, ‘வாத்தி’ உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் ‘நானே வருவேன்’ படத்தில் நடிகர் தனுஷ், தனது கதாபாத்திரத்திற்கான போர்ஷனை முடித்துக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.