’நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 20-ஆம் தேதி நடைபெறும்’ என ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில், தங்களின் வாக்களிக்கும் உரிமை பாதிக்கப்பட்டதாக ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் இறுதித் தீர்ப்பு வரும்வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தடை விதித்தனர்.

இதனால் தேர்தல் நடத்திய அதிகாரி பத்மநாபன், பதிவான வாக்கு சீட்டுகளை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி லாக்கரில் பத்திரப்படுத்தினார். சுமார் இரண்டரை வருடங்கள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 23ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம் 3 வார காலத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி, வாக்கு எண்ணிக்கைக்காக தேர்வு செய்யப்பட்டு அங்கு வரும் 20 ஆம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.