இந்தியா மட்டுமன்றி உலகளவில் விராட் கோலிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். உலகளவில் சிறந்த வீரராக இருக்கும் விராட், சமீப காலமாக சரியாக விளையாடுவதில்லை. இது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதற்குச் சான்றாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) நடந்து கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் விராட்டின் போஸ்டர் ஒன்றை ஏந்தியபடி ‘பாகிஸ்தானில் உங்கள் சதத்தைப் பார்க்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் இவரது புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்தப் புகைப்படத்தை பகிர்ந்த பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர், ‘கட்டாபி ஸ்டேடியத்தில் யாரோ அன்பைப் பரப்புகிறார்கள்’ என்று குறிப்பிட்டு அந்த போஸ்டரை வைத்திருந்த ரசிகரின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விராட் சரியாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் அவர் எப்போதும் அவரது ரசிகர்கள் மனதில் நிறைத்திருப்பார் எனவும் அவரது சிறப்பான ஆட்டத்தை இனி பார்ப்போம் என்றும் விராட்டின் ரசிகர்கள் சோயப் அக்தரின் ட்விட்டர் பக்கத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.