பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக கோவை காவல்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டில் நடிகர் சிம்பு பெண்களை பற்றி பாடிய பாடல் பீப் சாங்காக வெளியானதற்கு எதிராக சிம்பு, அனிருத் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து கோவை, சென்னை என பல இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த வழக்கின் விசாரணையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என கோவை மாஜிஸ்திரேட்டின் விசாரணை அறிக்கை அடிப்படையில் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னை காவல்துறை ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.