சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அந்தப் பகுதியின் தி.மு.க வட்டச் செயலாளராகப் பதவி வகித்து வந்தார். செல்வம் வர உள்ள மாநகராட்சி தேர்தலில்,188-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட தி.மு.க சார்பில் மனு அளித்திருக்கிறார். கட்சி நிர்வாகிகளுடன் பிப்ரவரி 1ம் தேதி தேர்தல் ஆலோசனை நடத்திவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, சுமார் இரவு 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மக் கும்பல் செல்வத்தைச் சரமாரியாக வெட்டியதில் அவர் உயிரிழந்தார் .
Also Read: சென்னை: திமுக வட்டச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த மர்மக் கும்பல் – தீவிர விசாரணையில் போலீஸ்!
அவரை அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், செல்வத்தைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு் பதிவு செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சென்னை, மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கில் ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகியோரை திருச்சி, சமயபுரம் சுங்கச் சாவடியில் போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Also Read: சென்னை: திமுக வட்டச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த மர்மக் கும்பல் – தீவிர விசாரணையில் போலீஸ்!