பெரம்பலூரில் அரியவகை ஆந்தை குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் குஞ்சுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர்.

பெரம்பலூர் கல்யாண்நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. மூன்று மாதங்களாக இயங்காமல் இருந்த அந்த ஆலையை பணியாளர்கள் சீர்செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பகுதியில் இருந்து பறவை குஞ்சுகள் நான்கு வித்தியாசமாக கத்தியபடி ஓடிவந்துள்ளன. பார்ப்பதற்கே வித்தியாசமான தோற்றத்துடனான பறவை குஞ்சுகள் இருப்பதாக தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று மீட்டுச்சென்றனர்.

image

அவை அரியவகையான கொட்டகை எனும் இனத்தை சேர்ந்த ஆந்தை குஞ்சுகள் என்றும், மலைத்தொடர்களில் வாழக்கூடியவை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

image

இனப்பெருக்கத்திற்காக இங்கே வந்த தாய்ப்பறவை குஞ்சு பொரித்திருக்கலாம் என்றும், தற்போது மீட்கப்பட்டுள்ள குஞ்சுகள்
இன்னும் பத்துநாளில் தனியாக வாழ பழகிவிடும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.