சென்னை விமான நிலையத்தில், கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் 11 நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் தூரித பரிசோதனைக்கு 3,400 ரூபாயும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு 700 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தூரித பரிசோதனை கட்டணம் 2,900 ரூபாயாகவும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் 600 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.