திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் திருவாரூர் மாவட்ட கிளை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் பிரேமா தலைமையில் நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பணி நிரந்தரம் செய்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்,

image

அங்கன்வாடி மைய கட்டிடங்கள் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி தண்ணீர், மின் வகைகளையும் தமிழக அரசு உடனடியாக சரி செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.