இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தின் முதற்கட்டப் படப்ப்பிடிப்பு நாளை நிறைவடைகிறது.

இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

image

கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த இப்படத்தின் பூஜையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குநர் ராஜமெளலி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 170 கோடியில் இப்படம் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியது.

இந்த நிலையில், நாளை முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைகிறது. அதன்பிறகு தீபாவளி விடுமுறைக்காக சிறு பிரேக் விடும் படக்குழுவினர் மீண்டும் ஹைதராபாத்தில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.