கர்நாடக வனப்பகுதியில் புலியுடன் கரடி சண்டையிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் நாகர்ஹோலே வனப்பகுதியில் உள்ள தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் வனவிலங்குகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு கர்நாடக வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது. வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை வனப்பகுதிக்குள் வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர்.

image

இந்நிலையில், நாகர்ஹோலே வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை காண்பதற்காக வனப்பகுதிக்குள் சென்றபோது கரடியும் புலியும் சண்டையிடும் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கரடி புலியை துரத்தியபடி செல்வதும் ஒரு கட்டத்தில் புலி கரடியை பார்த்து திரும்பி நின்றதும் கரடி சிறிது நேரம் புலியை பார்த்து விட்டு வனப்பகுதிக்குள் சென்று மறையும் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டு தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுவதால் வைரலாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.