கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பட்டாசு விற்பனை கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

செல்வகண்பதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு கடையின் அருகேயுள்ள பேக்கரியில் இருந்து தீப்பொறி பரவி விபத்து ஏற்பட்டதா என விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்துசென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துவருகின்றனர். 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் பலர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.