ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சட்டமன்றப் பேரவை ஏடுகள் குழுவின் ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் தூங்கியும், வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்பியபடியும் இருந்தது முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில், குழுவின் தலைவர் ராமகிருஷ்ணன், குழு உறுப்பினர்கள், பரமக்குடி, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, மாவட்டத்தில் நடைபெற்றுள்ள அரசின் திட்டங்கள், தேவையான வளர்ச்சித் திட்டங்கள், மக்களின் புகார்கள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.

image

இதில், கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் சிலர் தீவிரமாக தங்களது வாட்ஸ் அப்பை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அதிகாரிகளின் இத்தகைய செயல் முகம் சுளிக்க செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.