முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய மேலும் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து புதுக்கோட்டையில் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் விஜயபாஸ்கர் தொடர்புடைய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் மேலும் ஒரு இடத்திலும், மதுரையில் இரண்டு இடங்களிலும் சோதனை தொடங்கியுள்ளது. திருச்சியில் மேலும் ஒரு இடத்திலும், புதுக்கோட்டையில் மேலும் ஒரு இடத்திலும் சோதனை நடந்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சி.விஜயபாஸ்கரின் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.