விழுப்புரம் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 26.12.2020-ம் ஆண்டு அவரின் அம்மாவிடம் கோபித்துக் கொண்டு சென்னை மெரினா கடற்கரைக்கு வந்திருக்கிறார். பின்னர் கடற்கரையை அவர் சுற்றி பார்த்திருக்கிறார். அப்போது பானி பூரி வியாபாரம் செய்த ஆறுமுகம் என்பவர் சிறுமியிடம் அன்பாக பேசியிருக்கிறார். பிறகு அவரை அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது சொந்த ஊரான விழுப்புரத்துக்குச் சென்றுவிட்டார். இதனிடையே சில மாதங்களுக்கு முன் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

Also Read: ஆவடி: திருமண ஆசைகாட்டி சிறுமியிடம் அத்துமீறிய உறவினர்! -போக்சோ சட்டத்தில் கைதுசெய்த மகளிர் போலீஸ்

பாலியல் தொல்லை

உடனே சிறுமியை அவரின் அம்மா விழுப்புரம் அரசு மருத்துவமளைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்தததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் அம்மா, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவம் நடந்த இடம் மெரினா கடற்கரை என்பதால் இந்த வழக்கை திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்தனர். பின்னர் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸார், பானி பூரி வியாபாரி ஆறுமுகத்திடம் விசாரித்தனர். விசாரணையில் சிறுமியிடம் தவறாக நடந்ததை ஆறுமுகம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சென்னை மீனம்பாக்கம், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (22) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்னொரு சம்பவம்:

சென்னை அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 15 வயது சிறுமி. இவரின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதனால் தாயாருடன் சிறுமி வசித்து வருகிறார். சிறுமி குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (25) என்பவர், சிறுமியிடம் அன்பாக பழகியிருக்கிறார். பின்னர் 24.8.2021-ம் தேதியை சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற விக்னேஷ்வரன், அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இந்தத் தகவலை சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் தெரிவித்தார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் அம்மா ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் சிறுமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி விக்னேஷ்வரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சிறுமிக்குப் பாலியல் தொல்லை

விசாரணையில் சிறுமி, 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதனால் சிறுமியின் படிப்பு செலவுக்கு உதவி செய்வது போல நடித்த விக்னேஷ்வரன், அவரைக் காதலிப்பதாகக் கூறினார். இதையடுத்து சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ்வரனை போலீஸார் கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் விக்னேஷ்வரனை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.