நடிகை நயன்தாராவுடன் பிறந்தநாளை உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகளைக் கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்று தனது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இயக்குநராக வெற்றியடைந்தது மட்டுமல்லாமல் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அதாரு அதாரு’, ’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் ‘எங்க அண்ணன்’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் ’சோக்காலி’, நானும் ரெளடிதான் படத்தில் ‘தங்கமே’, ’ரெமோ’ படத்தில் ‘சிரிக்காதே’, ‘செஞ்சிட்டாலே’, அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ‘நாங்க வேற மாரி’உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். இவரது பாடல் வரிகளுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ வெளியாகவுள்ளது. அதோடு, தயாரிப்பில், ’கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவிருக்கின்றன.
இந்த நிலையில், நயன்தாராவுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன் “நன்றி தங்கமே” என்று அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார். ஹார்ட்டின்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.