இன்றைய டிஜிட்டல் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று கூகுள். இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மட்டுமே விதிமுறைகளை மீறிய 95,680 கன்டென்ட் துணுக்குகளை நீக்கியுள்ளோம் என அறிக்கை மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனியுரிமை, காப்புரிமை, பாலியல் உள்ளடக்கம், போலி தகவல்கள், நீதிமன்ற உத்தரவு, சட்டம், அவதூறு என பல்வேறு பிரிவுகளின் கீழ் கூகுளின் இந்திய பயனர்கள் தெரிவித்திருந்த 36,934 புகார்களின் அடிப்படையில் 95,680 கன்டென்டுகளை நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
அது தவிர கூகுளின் தனியுரிமை கொள்கைகளை மீறிய 5,76,892 கன்டென்டுகளை கூகுள் தானியங்கு முறையில் அடையாளம் கண்டு நீக்கியுள்ளது. இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் காரணமாக கூகுள் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஜூனில் 83613, மே மாதத்தில் 71132 மற்றும் ஏப்ரலில் 59350 கன்டென்டுகளை கூகுள் பயனர்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் நீக்கியுள்ளது.
இதையும் படிக்கலாம் : பாராலிம்பிக் : உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்