விழுப்புரத்தில் அமைச்சரை வரவேற்க கட்சிக் கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேக மரணம் என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மாம்பழம்பட்டு சாலையில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற அமைச்சர் க.பொன்முடியை வரவேற்க சாலையோரத்தில் கட்சிக் கொடிகள் நடப்பட்டன. கட்சி கொடிகளை நடும் தொழில் செய்துவரும், ரஹீம் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், ஏகாம்பரம் என்பவரது மகன் தினேஷை (13) உதவிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுவன் தினேஷ் கொடி நடும்போது, மேலே சென்ற உயர் மின்அழுத்த கம்பியில் கொடிக்கம்பு உரசியதில் மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டான். படுகாயமடைந்த சிறுவன் தினேஷ் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால், சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்தான்.

கடந்த 2 நாட்களுக்கு முன் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாய் லட்சுமி, விழுப்புரம் மேற்கு காவல ;நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், சந்தேக மரணம் என காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடி கடும் பணிக்கு சிறுவன் தினேஷை அழைத்துச் சென்ற வெங்கடேசனிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.