நகை விற்பனையாளர்கள் வரும் 23-ஆம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளனர்.
நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதாக நகை வணிகர்கள் தெரிவித்துள்ளனர். நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையிடும்போது பிரத்யேக அடையாள எண் தரும் விதி நடைமுறையில் சிக்கல் நிறைந்ததாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் நாடெங்கும் உள்ள 350 நகை வணிகர்களின் சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.