காங்கிரஸை மக்கள் நிராகரித்துவிட்டதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டம் தொடர்பாக பாஜகவின் செய்தித்தொடர்பாளரும் எம்.பி.யுமான அனில் பலூனி இவ்வாறு எதிர்வினையாற்றினார். காங்கிரஸ் கட்சிக்கு தன் மீது நம்பிக்கை இல்லாததால் கூட்டணி தேடுவதுதான் நல்லது என்றும், காங்கிரஸின் உடைந்த ஊன்றுகோலை பயன்படுத்த இப்போது யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
காங்கிரஸின் எதிர்காலம் இருண்டுவிட்டதாகவும், காங்கிரஸை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும், அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிடதாகவும் அனில் பலூனி தெரிவித்தார். நாட்டை முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார் என்றும் அனில் பலூனி கூறினார்.