சென்னையில் தியாகராயநகர் உள்ளிட்ட 9 இடங்களில் நாளை முதல் அங்கன்வாடிகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவை சுட்டிக்காடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஜாம்பஜார் உள்பட 9 இடங்களில் வணிக வளாகங்களை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. சென்னையில் 9 இடங்களில் கடைகளுக்கான தடை நாளை காலையுடன் முடியும் நிலையில், மீண்டும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேரக்கட்டுப்பாடுகளுடன் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.