சென்னை அம்பத்தூரை அடுத்த கள்ளிகுப்பம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபுகுமார் (40) என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி விமலா (35). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பிரபுகுமார், வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் விமலா இருந்தார்.

அம்பத்தூர்

மருத்துவமனைக்குச் செல்வதற்காக விமலா வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். பின்னர் இவர்கள் வீட்டுக்கு ஒரு ஆணும் பெண்ணும் வந்தனர். பூட்டை உடைத்து அவர்கள் உள்ளே சென்றனர். பூட்டு உடைக்கப்படும் சத்தம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் வெளியில் வந்து பார்த்தனர். அப்போது விமலா வீட்டின் கதவு திறந்திருந்தது.

Also Read: சென்னை: 10 ரூபாயால் துப்பு துலங்கிய திருட்டு வழக்கு… நம்பிக்கை துரோகம் செய்த தம்பதி!

உடனடியாக அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் உஷாராகினர். விமலாவுக்கும் போன் செய்து தகவல் தெரிவித்தனர். விமலா, வீட்டுக்கு வருவதற்கு முன்பே வீட்டுக்குள் இருந்த ஆண், பெண் இருவரையும் அக்கம் பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீடு புகுந்து திருட முயன்றவர்களைப் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அம்பத்தூர் காவல் நிலையம்

விசாரணையில் அவர்கள் இருவரும் கணவன் மனைவி எனத் தெரியவந்தது. அவர்களின் கருணா பிரபு (36), சௌமியா எனத் தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து அவர்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் கொள்ளையடிக்க தம்பதியினர் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.