நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார்? என்ற விவரங்களை கேட்டு ட்விட்டர் நிர்வாகத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். நடிகை குஷ்பு கொடுத்த புகாரில் அடிப்படையில் இந்த விளக்கத்தை போலீசார் கேட்டுள்ளனர்.
தனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு பதிவுகள் நீக்கப்பட்டதாக கடந்த 20ஆம் தேதி டிஜிபியிடம் புகார் கொடுத்திருந்தார் குஷ்பு. அதோடு அது குறித்து ட்விட்டரிடம் தெரிவித்தும் பயனில்லை என அவர் தெரிவித்து இருந்தார்.