நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள ஜல்லிகுழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஷாலினி. இந்த தம்பதியின் 6 வயது மகன் ஜீவன்ஸ்ரீ. இந்த தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். மகன் ஜீவன்ஸ்ரீயை தாய் ஷாலினி பராமரித்து வந்துள்ளார்.

death

இந்த நிலையில், நேற்று மாலை ஜீவன்ஸ்ரீ கட்டிலில் இருந்து கிழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதாக ஊட்டியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். சிறுவன் ஜீவன்ஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உடலை கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Also Read: க்ரைம் டேப்ஸ்: தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கொலை; ஒரே கைரேகை! -துப்பு துலங்கியது எப்படி?| பகுதி 2

உடற்கூறாய்வு மேற்கொண்டதில், சிறுவனின் தலையில் ஏற்பட்ட காயம் வெட்டுக்காயம் போல இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுவன் மரணம் தொடர்பாக ஊட்டி பி1 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சிறுவனின் உறவினரான விஜயகுமார் என்பவர் இரும்பு கம்பியைக் கொண்டு சிறுவனை தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

Ooty Court

இந்த விவகாரம் குறித்து பேசிய ஊட்டி பி1 காவல் நிலைய போலீஸார், “சிறுவனின் தலையில் ஏற்பட்டது வெட்டுக்காயத்தைப் போல் இருந்ததால், விபத்தா? அல்லது கொலையா? என்ற சந்தேகம் எழுந்தது. வழக்குப்பதிவு செய்து சிறுவனின் பாட்டி, பெற்றோர் மற்றும் அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியதில், சிறுவனின் மாமா விஜயகுமாரை சிறுவன் ‌விளையாட்டாக கேலி செய்ததும், இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் இரும்புக் கம்பியை எடுத்து தாக்கியதில் கடுமையான காயம் ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் விஜயகுமாரை கைது செய்துள்ளோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.