லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க புதிய சிக்கல் முளைத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை இப்போது இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன. தமிழில் தயாரித்த எஸ்.ஆர். பிரபுவே இந்தியிலும் தயாரிக்கிறார். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் தான் சிறையில் இருந்ததை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவிடம் சொன்னதாகவும், கூறியுள்ளார்.

image

மேலும் அந்த கதையை படமாக எடுக்க ரூ.10,000 ரூபாய் முன்பணமாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார். நான் இரண்டாம் பகுதியைதான் அவர் கைதி என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த படத்தை தற்போது ஊரடங்கு சமயத்தில்தான் பார்த்ததாகவும் கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கைதி படத்தை ரீமேக் செய்யவும், அதன் இரண்டாம் பாகங்களை எடுக்கவும் தடை விதித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.