கொரோனா ஊரடங்கால் ஆந்திராவில் குறைவான பஸ் போக்குவரத்து மட்டுமே இயக்கப்படுவதால் நடிகர் ராம் சரணை அவரது ரசிகர்கள் மூன்று பேர் 231 கிலோ மீட்டர் நடந்தே சென்று சந்தித்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் முழுக்க தற்போது வைரலாகி வருகின்றன.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகமுள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் குறைவான பஸ் போக்குவரத்தே இயக்கப்படுகிறது.

image

இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரணை சந்திக்க அவரது தீவிர ரசிகர்களான சந்தியா ஜெயராஜ், ரவி, வீரேஷ் ஆகியோர் எண்ணியுள்ளார். ஆனால் கொரோனா தொற்று காரணமான பேருந்துகள் அதிக அளவில் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் பேருந்து வசதி இல்லாவிட்டால் என்ன நடந்தே சென்று தன்னுடைய ஹீரோவை பார்த்துவிடுவது என்று முடிவு செய்துள்ளனர். தெலங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்திலிருந்து நான்கு நாட்கள் 231 கிலோ மீட்டர்கள் ஹைதராபாத் வரை இந்த மூவரும் நடந்தே வந்து நடிகர் ராம் சரணை சந்தித்துள்ளனர்.

image

நடிகர் ராம் சரணும் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து கட்டி அணைத்து வரவேற்றுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.