தனது இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ். 

நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான  ‘லூசிஃபர்’ படத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  அவரின், முதல் படமே கேரள சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஒன்றானது. ஸ்டைலிஷ் அரசியல் சஸ்பென்ஸ் கதையைக் கொண்ட இப்படத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவேக் ஒபாராய் உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். இதனைத்தொடர்ந்து, பிரித்விராஜ் இயக்கத்தில் அடுத்தப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். ஆனால், படம் இயக்காமல் ’அய்யப்பனும் கோஷியும்’ படத்தில் நடித்தார். இப்படம், கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ’கோல்ட் கேஸ்’ வரும் 30 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. 

image

இந்நிலையில், தான் இயக்கும் இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை இன்று ட்விட்டரில் அறிவித்திருக்கிறார் பிரித்விராஜ். ’ப்ரோ டேடி’ என்று பெயரிட்டுள்ள, இந்தப் படத்திலும் மோகன்லால்தான் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  நகைச்சுவை கொண்ட குடும்பப்படமான ’ப்ரோ டேடி ‘ உங்களை சிரிக்கவும், மீண்டும் மீண்டும் பார்க்கவும் வைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் பிரித்விராஜ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.