தடுமாற்றமான காலங்களைக் கடப்பதற்கு நமக்கு மிகவும் தேவை ஒரு வழிகாட்டி. அப்படிப்பட்ட ஒரு வழிகாட்டியாகவே ஜோதிடம் நம் மரபில் இருந்துவந்துள்ளது. ஒருவரின் ஜனன கால ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் தனிப்பட்ட வாழ்வைக் கணித்துக் கூறுவதுபோல கோசாரப் படி பொதுவான பலன்களையும் சொல்லமுடியும். இவற்றை அறிந்துகொள்வதன் மூலம் முயற்சிகளில் கொஞ்சம் முன் ஜாக்கிரதையோடு அல்லது துணிச்சலோடு முன்னேறுவதை மேற்கொள்ள முடியும்.
அப்படி இந்த வாரத்துக்கான ராசிபலன்களை நமக்காகக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் இரா. கார்த்திகேயன். இந்த வாரம் சந்திரன் புனர்பூச நட்சத்திரத்திலிருந்து அஸ்த நட்சத்திரம் வரை சஞ்சாரம் செய்கிறார். இதனால் இந்த வாரம் தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு சந்திராஷ்டம தினங்கள் வருகின்றன. இவற்றையும் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த வாரத்தில் மற்றுமொரு முக்கியமான கிரகப் பெயர்ச்சியும் நடைபெறுகிறது. அது, ரிஷப ராசியிலிருந்து பெயர்ந்து சூரிய பகவான் மிதுன ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். அதாவது 15 ம் தேதி முதல் ஆனி மாதம் தொடங்குகிறது. ஆனி மாதத்தை ஜேஸ்ட மாதம் என்று நம் முன்னோர்கள் சொல்கிறார்கள்.
இந்த வாரத்தில் வரும் திதிகளில் அஷ்டமி, நவமி உள்ளதையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு, இந்த வாரம் எந்த ராசிக்கு சாதகமாக அமையும்? எந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்? எந்த ராசிக்கு எந்த நிறம் அதிர்ஷ்டம் போன்ற குறிப்புகளையும் பன்னிரு ராசிகளுக்கும் இந்த வார ராசிபலன்களில் வழங்கியிருக்கிறார் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.