நாடு முழுவதும் ஒரே நாளில் 3,874 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். முந்தைய நாளைவிட உயிரிழப்பு சற்று குறைந்துள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு 31 லட்சத்து 29 ஆயிரத்து 878 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் கொரோனா தொற்றால் 4,529 பேர் உயிரிழந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 3,874 பேராக உயிரிழப்பு குறைந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,87,122 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 2,23,55,440 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 3,69,077 குணமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 18,70,09,792 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.