மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான ஜெகன்னாத் பகாடியா கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 89.
கடந்த 1980 மற்றும் 1981ம் ஆண்டுகளில் முதலமைச்சராக பதவி வகித்துவந்த அவர் ஹரியானா மற்றும பீகார் மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். ஜெகன்னாத் பகாடியா மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் உயிரிழந்து வருவது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.