இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெரும்பாலான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மக்களின் ஆர்வத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் “இந்த அப்ளிகேஷனை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்து கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்” என வரும் குறுந்தகவல் மூலம் வரும் லிங்குகளை ஓபன் செய்ய வேண்டாம் எனவும். அப்படி செய்தால் அது உங்களது போனை ஹேக் செய்யும் எனவும் போபால் நகர சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அரசின் அப்ளிகேஷனை பயன்படுத்தி தடுப்பூசிக்கான முன்பதிவை மேற்கொள்ளுமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த போலி குறுந்தகவலில் உள்ள லிங்குகள் மூலம் செல்போனில் அந்த அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தால் அதன் மூலம் செல்போனில் உள்ள தனிப்பட்ட தரவுகளான போட்டோ, வீடியோ, தொலைபேசி எண்கள், வங்கி விவரம், வாட்ஸ்அப் செய்திகள் என அனைத்தையும் ஹேக் செய்து விடுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர்.